இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதற்கெல்லாம் பணம்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே முரளி குடும்பத்தினர் தனலட்சுமிக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினர். உன்னுடைய வீட்டிற்குச் சென்று மேலும் பணம் வாங்கிக்கொண்டு வா என தனலட்சுமியை தினந்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், குடி போதைக்கு அடிமையான முரளி தனது மனைவி தனலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவி சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனாலும், இவர்களுக்குள் தினந்தோறும் தகராறு நடந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதியன்று கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மாப்பிள்ளை வீட்டிலிருந்து தனலட்சுமி குடும்பத்தாரை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விஷயங்களை கூறியுள்ளனர். ஒருகணம், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக முரளி வீட்டுக்கு வந்து தங்களுடைய மகளின் உடலைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். அதுமட்டுமின்றி, தனது மகள் தனலட்சுமியை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கணவன் வீட்டார் கொன்றுவிட்டதாக சோழவரம் காவல் நிலையத்தில் பெண் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த தனலட்சுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், திருமணம் ஆன 11 மாதத்திலேயே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது திருமணமான 11 மாதத்தில் மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.