ADVERTISEMENT

காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.. ! கொலையா? தற்கொலையா? போலீஸ் தீவிர விசாரணை!

05:05 PM Oct 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது கட்டளை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் 24 வயது சுபாஷ் மாணிக்கம். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது ஊரான கட்டளைக்கு வந்து அவரது பெற்றோருடன் தங்கியுள்ளார்.

ADVERTISEMENT


இந்த நிலையில் 19ஆம் தேதி சுபாஷ் மாணிக்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. உறவினர் வீடுகளுக்கும் சென்று விசாரித்தனர் சுபாஷ் மாணிக்கம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சுபாஷ் மாணிக்கத்தின் தந்தை சங்கர், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் தனது மகனை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.


அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பிரம்மதேசம் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று காலை சுபாஷ் மாணிக்கத்தின் இறந்த உடல் கிடந்துள்ளது. இது தற்செயலாக பார்த்த ஊர்மக்கள், பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


சுபாஷ் மாணிக்கம் சென்னையிலிருந்து வந்த பிறகு கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். சுபாஷ் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து கிணற்றில் போட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT