ADVERTISEMENT

“என்ன உடனே கைது பண்ணி ஜெயில்ல போடுங்க” - நடுசாலையில் படுத்து போதை ஆசாமி ரகளை

10:04 AM Nov 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தலைக்கேறிய போதையில் போதை ஆசாமிகள் செய்யும் சேட்டைகள் அவ்வப்போது வீடியோக்களாக வெளியாகி வைரலாகும். அண்மையில் மழை வெள்ளத்தில் போதையில் ஒருவர் படுத்துக் கிடந்தது. அதே போல் ஒருவர் முழு போதையில் நின்று பேருந்தை ஒற்றைக் கையால் நிறுத்துவது என அவர்களின் சாகசமே தனிரகம்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையத்திற்கு முன்பு படுத்துக்கொண்டு தன்னைக் கைது செய்யும்படி கெஞ்சிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கம்பட்டியைச் சேர்ந்த நல்லகுரும்பன் என்ற நபர் காவல்நிலையத்திற்கு வந்து, குடும்பத்தில் தன்னை யாரும் மதிக்கவில்லை. எனவே என்னைக் கைது செய்யுங்கள். என்னை உடனே சிறையில் அடையுங்கள் எனக் கெஞ்சினார். போலீஸ் அவரை விரட்டி விட்ட நிலையில், சாலைக்கு வந்த அந்தப் போதை ஆசாமி காவல்நிலையத்திற்கு முன்பாக இருந்த சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். தொடர்ந்து எழுந்திருக்க மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த அந்த நபரை காவல்துறையினர் அழைத்துச் சென்று லாக்கப்பில் வைத்து போதை தெளிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT