Skip to main content

மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் தேர்தல் பயம்!- அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு!  

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

மதுரை தத்தனேரி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களைச் சந்தித்தார். “இத்திட்டத்தின் மூலம் மதுரை தூய்மையான நகரமாக, குப்பையில்லா நகரமாக, குப்பைத்தொட்டி இல்லா நகரமாக மாற்றப்படும். இதன்மூலம் தொன்மையும், பழமையும் சேர்ந்த புதுமையான நகராக மதுரையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
 

தமிழக அரசைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின். மீட்பு பணி நடைபெற்ற இடத்திற்கு முதல்வர் வரமுடியாத சூழ்நிலையில் துணைமுதல்வரை அனுப்பிவைத்தார். மூன்று நாட்களும் துணைமுதல்வர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை கவனித்தார். குழந்தை சுஜித் மீட்பு பணி விவகாரத்தில் மனசாட்சியை அடகுவைத்து விட்டு தமிழக அரசைக் குற்றம் குறை சொல்லி வருகிறார் ஸ்டாலின். 

MADURAI MINISTER SELLUR RAJU SPEECH


தமிழக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு மனசாட்சியே இல்லாத எதிர்க்கட்சித்தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். தீபாவளியைக்கூட  கொண்டாட முடியாமல் புறந்தள்ளிவிட்டு குழந்தை சுஜித் மீட்பு பணியில் அமைச்சர்கள் முழு நேரமும் ஈடுபட்டனர். குழந்தையை மீட்கும் பணியில் அரசின் அத்தனை துறைகளும், அமைச்சர்களும் முழுமையாக ஈடுபட்டனர். அனைத்து தொழில்நுட்பங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. 
 


தமிழக அரசின் மீட்புப்பணியைக் கண்டு சுஜித்தின் தாய் தந்தையே அரசைப் பாராட்டுகின்றனர். ஆனால் அதிமுகவுக்கு புகழ் சேர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் வேண்டுமென்றே அரசைக் குறை கூறி வருகிறார். நெல்லையில் கண்முன்னே உயிருக்குப் போராடிய காவலருக்கு தண்ணீர் கூட தந்து உதவாத ஆட்சி திமுக ஆட்சி. உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.  






உள்ளாட்சித்தேர்தலை தற்போது நடத்துவதற்கு ஸ்டாலினே பயப்படுகிறார். இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவைக் கண்டபிறகு உள்ளாட்சித்தேர்தலைக் கண்டு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். கடந்த 10 நாட்களாக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஸ்டாலின் எதுவுமே பேசவில்லை.” என்றார் அதிரடியாக. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.