அதே பகுதியைச் சேர்ந்த பவளக்கொடியின் உறவினர், செந்தில்குமாரின் மனைவி சரஸ்வதி கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில், பவளக்கொடியின் வீட்டுக்குச் சென்ற சரஸ்வதி மருத்துவச் செலவுக்கு அடமானம் வைக்க அவர் வைத்திருந்த நகையை கேட்டதாகவும், பவளக்கொடி நகையைத் தர மறுத்ததால் அவரது கழுத்தை சரஸ்வதி நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்பு, அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்ததோடு, பவளக்கொடி வீட்டில் வைத்திருந்த ரூ.13,000 பணத்தையும் சரஸ்வதி திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினா் சரஸ்வதியை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். நகைக்காக உறவினர் பெண்ணே மூதாட்டியை கொலை செய்த சம்பவம் இலங்கைச்சேரி கிராம மக்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.