ADVERTISEMENT

7 மணிக்குள் வெளுத்து வாங்கப்போகும் மழை; 32 மாவட்டங்களுக்கு அலர்ட்

04:31 PM Nov 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு ஏழு மணிக்குள் சென்னை உட்பட 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT