ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நீட் விவகாரம், தமிழக ஆளுநரை மாற்றம், ஹிஜாப் விவகாரம் என தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். தமிழக ஆளுநரை கண்டித்து வெளிநடப்பும் செய்திருந்தனர். இதற்கிடையே ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக ஆவேசமாக பேசினார்.
பேச்சின் நிறைவில் ஜெய் பீம், அல்லாஹூ அக்பர் எனக் கூறி பேச்சை நிறைவு செய்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சோனியா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், " என்னை கண்டதும் அவர் (சோனியா காந்தி) தமிழில் வணக்கம் எனத் தெரிவித்தார்" என்று மகிழ்ச்சியுன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments