Skip to main content

பெரியார் ஏன் முதலமைச்சர் ஆகவில்லை... காரணத்தை உடைத்த திருமா!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

திராவிட இயக்கத்தின் பவளவிழா மாநாடு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திராவிட இயக்கம் தொடர்பாக, அதன் செயல்பாடுகள் தொடர்பாக ஆவேச உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டில் இன்னும் முற்றாக சாதி ஒழிந்துவிட வில்லை, தமிழாட்டில் இன்னும் முற்றாக சமத்துவம் மலர்ந்துவிட வில்லை. அதனால் பெரியாரியம் தோற்றுவிட்டது, திராவிடர் கழகம் தோற்றுவிட்டது என்று யாராவது நினைத்தால் அவர்கள் அரசியல் அறியாமையில் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். எல்லாவற்றுக்கும் ஒரு கால இடைவெளி தேவைப்படுகிறது.

 

hdxz



ஈராயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் புரையோடிகிடக்கின்ற சாதி, மதம் வேறுபாடுகளை வெறும் 75 ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது என்பதுதான் நாம் உணர வேண்டிய அறிவியல் உண்மை. அதற்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது. இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. இதெல்லாம் நிறைவேறவில்லையே என்று திராவிட கழகத்தின் மீது நாம் விமர்சனம் வைக்க முடியாது. அப்படி யாராவது விமர்சனம் வைத்தால் அவர்களின் புரிதலில் தவறு இருக்கிறதே அன்றி, அது நிஜத்தில் உண்மை அல்ல. தந்தை பெரியார் தோன்றிருக்காவிட்டால், திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். பெரியார் மட்டும் பதவியாசை பிடித்தவராக இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியிலே நீடித்திருக்க முடியும்.

அப்படி அவர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்திருந்தால் அடைய முடியாத பதவியை எல்லாம் அவரால் அடைந்திருக்க முடியும். தொடமுடியாத உச்சத்தை எல்லாம் தொட்டிருக்க முடியும். அதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி அப்போது மேல்நோக்கி வளர்ந்து கொண்டிருந்த காலம். எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் வளர்ந்துகொண்டிருந்த நிலையில், பதவிதான் முக்கியம் என்று பெரியார் நினைத்திருந்தால், காமராஜர் போல தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருக்க முடியும். பெரியார் மறைந்த போது இனி திராவிடர் கழகம் அவ்வளவுதான் என்று பலர் மகிழ்ச்சியுற்றார்கள்.அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.

அடுத்து அவரின் கொள்கைகளை வீரியத்தோடு பரப்பினார் பேரறிஞர் அண்ணா. அவர் மறைந்து போனால் திராவிடம் அவ்வளவுதான் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கலைஞர். அவர்களின் எண்ணங்களை தவிடிபொடியாக்கினார். இன்று அவர்கள் மூவரும் இல்லை. ஆனால், திராவிட இயக்க கொள்கை இன்றும் உயிர்போடுதான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் இந்த சமூகத்தில் ஊடுறுவி இருப்பதால்தான். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதனை அழிக்க முடியாது. நீர்த்துப்போக செய்ய முடியாது" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.