ADVERTISEMENT

எங்களுக்கென்று தனிப்பட்ட தலைவர்கள் யாரும் கிடையாது: மு.க.அழகிரி

12:14 PM Aug 23, 2018 | Anonymous (not verified)


தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றும் எங்களுக்கென்று தனிப்பட்ட தலைவர் என யாரும் கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மு.க.அழகிரியின் மகன் தயா அழகிரி தனது டிவிட்டர் பதிவில், 50 ஆண்டுகள் கடந்து ஒரு இயக்கத்தின் தலைவராக ஆளுமை செலுத்தி மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதனையை பறைசாற்றிடும் விதமாக அவர் வகித்த தலைவர் பதவியை அவருக்கான நிரந்தர தலைவர் பதவியாக கவுரவித்து கொண்டாடுவதே அவருக்கு அளிக்கின்ற சிறந்த மரியாதையாக அமைந்திடும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,

தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றும் எங்களுக்கென்று தனிப்பட்ட தலைவர் என யாரும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும், சென்னையில் வரும் செப்.5 நடைபெறும் பேரணியில் கலைஞரின் உண்மை தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT