ADVERTISEMENT

சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் சிறுமி பலி..!

05:37 PM Dec 04, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே, சுவர் இடிந்துவிழுந்த விபத்தில், கூலித் தொழிலாளியின் மகளான 7 வயது சிறுமி உயிரிழந்தார்.

ADVERTISEMENT


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் அருகே பசும்பலூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் - திருச்சடை தம்பதியினரின் 7 வயது மகள் யோசனா என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், சிறுமியின் அருகில் படுத்து உறங்கிய, அவரின் தங்கை, 5 வயது பெண் குழந்தையான கீர்த்தனா, மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ராமு ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வி.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT