திருவரங்குளம் ஒன்றியத்தில் ஒரு கிராமத்தில் ஒரு வேட்பாளர் கடைவீதியில் நின்ற மக்களிடம்”கண்ணாடிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்லிவிட்டு செல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வாக்காளர்.. ஆமா இப்ப ஓட்டுக் கேட்கிறவரும் தேர்தல்ல நிற்கிறாரே அப்பறம் ஏன் பழைய தலைவர் கண்ணாடிக்காரருக்கு ஓட்டுக் கேட்கிறார். இவரு வாபஸ் வாங்கிட்டாரா? என்று கேட்க அந்த இடத்தில் நின்ற பலருக்கும் குழப்பம் வந்துவிட்டது.
அந்த பகுதியில் நின்ற ஒரு இளைஞரிடம் நாம் கேட்க.. இப்ப ஓட்டுக் கேட்டவரின் சின்னம் மூக்கு கண்ணாடி.. அதனால் கண்ணாடிக்கு ஓட்டுப் போடுங்கனு கேட்கிறார். ஆனால் இந்த வாக்காளர்கள் நினைக்கிறது பழைய தலைவர் கண்ணாடி போட்டிருப்பவர். அதனால அவரை கண்ணாடி என்று சொல்வார்கள். அதனால்தான் இவர் கண்ணாடி என்று சின்னத்தை சொல்லும்போது மக்கள் கண்ணாடிக்காரர் என்று புரிந்து கொண்டார்கள். இதில் ஏகப்பட்ட குழப்பம் வரப் போகுது என்று சிரித்துக் கொண்டார் அந்த இளைஞர். இப்படி நகைச்சுவை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இப்படி வந்ததை பார்த்து எங்களை கோமாளிகள் போல நினைத்தாலும் எங்கள் சின்னமும், வேட்பாளரும் இந்த வாக்காளர்கள் மனதில் பதிந்துவிடும் அதனால் கத்தரிக்காய் சின்னத்திற்கு வாக்குகள் போடுவார்கள் என்கின்றனர் கூட வந்த இளைஞர்கள்.
இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமாக மக்களை கவர வேட்பாளர்கள் முயற்சிகள் செய்து வருகிறார்கள்.