ADVERTISEMENT
ADVERTISEMENT
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். பல அரசியல் தலைவர்கள் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை மழைப்பொழிவு ஏற்பட்ட போதிலும் தொண்டர்கள் கூட்டம் கலையாமல் காவேரி மருத்துவமனையின் முன் தொண்டர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. மேலும் இன்னும் சிறிது நேரத்தில் கலைஞர் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் தொண்டர்கள் கூட்டம் குவித்துள்ளது.
அதேபோல் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும் கலைஞர் உடல்நலம் பற்றி விசாரிக்க தற்போது காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். தொண்டர்கள் அதிகம் குவிந்து வருவதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
Show comments