ADVERTISEMENT
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய 'தமிழ்த் திரைப் பணி - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் வாய்மொழித் தேர்வு நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்த் துறையின் பேராசிரியர் இரா. கருணாநிதியை நெறியாளராக கொண்டு கலைஞர் கதை, வசனம் எழுதிய கலைஞரின் பெண் சிங்கம் திரைப்பட இயக்குநர் ஸ்ரீ கபாலி என்கிற பாலி ஸ்ரீரங்கம் ஆய்வு மாணவராக, கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய 75 படங்களை முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து கலைஞரின் திரைப்படைப்புக்களை ஆய்வு செய்து வந்தார். தற்போது கலைஞரின் திரைப் பணி ஆய்வு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments