ADVERTISEMENT

விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தைக்கு உயிரோடு தீ வைத்த மகன்...!

01:28 PM Jan 10, 2019 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. வேலூரில் நான்கு தியேட்டர்களில் அப்படம் வெளியாகியுள்ளது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் புதுத்தெருவை சேர்ந்தவன் 20 வயதான அஜித்குமார். அஜித்குமார் என்கிற பெயர் வைத்ததாலோ என்னவோ தீவிர அஜித் வெறியனாகவே இருந்து வந்துள்ளான்.


படம் பார்ப்பதற்காகவும், அஜித்திற்கு கட்அவுட் வைக்கவும், பாலபிஷேகம் செய்யவும் தனது தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளான். கூலி தொழிலாளியான பாண்டியன், பணம்மில்லடா போடா எனச் சொல்லியுள்ளார். நீ பணம் தரலன்னா அவ்வளவுதான் என மிரட்டியுள்ளான், டேய் போடா எனச் சொல்லிவிட்டு அவர் இரவு தூங்க சென்றுள்ளார்.

பணம் தரவில்லை என்கிற கோபத்தில் இரவு படத்துக்கு போகமுடியவில்லை என்கிற ஆத்திரம் அதிகமாகி தூங்கிக்கொண்டு இருந்த தனது தந்தை மீது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்துவந்து முகத்தின் மீது ஊத்தியுள்ளான். தன் மீது பெட்ரோல் வாசனை வருகிறதே என பதட்டமாகி எழுந்துக்கொள்ளும் முன் தீ குச்சியை உரசி மகன் தனது தந்தைக்கு உயிரோடு தீவைத்துள்ளான். அவர் அலறி எழுந்து கத்தி போர்வையால் முகத்தை அழுத்தி தீயை அணைத்தார்.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியாகி அவனை பிடித்து தர்ம அடி அடித்துள்ளனர். காயம்பட்ட பாண்டியனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதுப்பற்றி விருதம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


அப்பகுதி மக்களோ, பாண்டியன் ஒருக்குடிக்காரன். அக்குடும்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும். இது பணம் தரவில்லை என்தபற்காக நடந்ததா, அல்லது வேறு காரணமா என விசாரிக்க வேண்டும் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT