இதற்கு முன்பு இப்படி ஒரு நடைமுறை இருந்ததில்லை ஆளுநரின் செயலாளர் என்பது உதவியாளர் என்கிற அந்தஸ்துதான் அவர் வேண்டுமானால் தனியாக துணைவேந்தர் சந்திப்பு நடத்தியிருக்கலாம் ஆனால் மாறாக ஆளுநரின் செயளாலருக்காக இப்படி ஒரு சந்திப்பு நடத்துவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நீண்ட நாட்களாக தற்காலிக ஊழியர்களாக இருந்த 60 பேரை நிரந்தர பணியாளராக நாளை நியமித்து இருக்கிறார்கள். அதேபோன்று கடந்த ஜீலை மாதம் உதவி பேராசிரியர் - 26 பேர், இணை பேராசிரியர் 14 பேர், பேராசிரியர் 14 பேர் என 54 பணியிடங்கள் நிரப்படுவதற்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் தேதியோடு விண்ணப்பிக்கும் கெடு முடிந்த நிலையில் தற்போது விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்படும் நிலையில் இந்த ஆளுநர் செயலாளர் சந்திப்பு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். பேராசிரியர்கள்.
இந்நிலையில் ஆய்விற்கு செல்லவில்லை என ஆளுநரின் தனி செயலாளர் ராஜகோபால் தனியார் சேனல் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ளார். அதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடக்கவிருந்த ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட்டத்திற்கு ஆளுநரின் தனி செயலாளர் செல்வது தமக்கு தெரியாது என ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சரும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.