“அகதிகளாக வாழ்ந்து பார்த்தால்தான் அவர்களின் மனவலியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். 28 ஆண்டுகளாக அகதி வாழ்க்கைதான் எங்களுக்கு வாய்த்திருக்கிறது.”
-அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் விருதுநகரில் மாவட்ட ஆட்சியரிடம் இந்தியக் குடியுரிமை கோரி மனு அளித்துவிட்டு வெளிப்படுத்திய குமுறல் இது!
பாலச்சந்திரன் என்ற அகதி தனது மனுவில் ‘இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக 1990-ல் ராமேஸ்வரம் வந்தேன். அதிகாரிகளின் விசாரணைக்குப்பிறகு கோல்வார்பட்டி முகாமுக்கு என்னை அனுப்பி வைத்தனர். ஆறு மாதங்களுக்குப்பிறகு ஆனைக்குட்டம் முகாமிற்கு மாற்றினர்.
பாலச்சந்திரனைப் போலவே மற்ற இலங்கை அகதிகளும் இன்னல் நிறைந்த தங்களின் வாழ்க்கைச் சூழலை மனுக்களில் விவரித்துள்ளனர்.
தொப்புள்கொடி உறவு என்று இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்து பேசும் தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கின்றனர். இந்த அகதிகளும் இலங்கைத் தமிழர்கள்தான். இவர்களின் பரிதவிப்பை அறிந்து ஆதரவுக்குரல் எழுப்புங்கள். இவர்களின் துயர வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திட அரசு முன்வர வேண்டும்.