ADVERTISEMENT

நான் அரசுக்கு எதிராக செயல்படவில்லை - விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன்

09:33 AM Apr 27, 2019 | sundarapandiyan

ADVERTISEMENT

இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக போனால் ஆட்சியை தக்க வைப்பதற்காக அதிருப்தி அதிமுக எம்.எல்ஏக்களை தகுதி நீக்கும் தற்காப்பு நடவடிக்கையை அ.தி.முக அரசு கையிலெடுத்துள்ளது.

ADVERTISEMENT

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி இரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேரை தகுதி நீக்கம் செய்ய இன்று சபாநாயகர் தனபாலுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆலோசனை செய்தனர். 3 எம்எல்ஏக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை தலைவர் தனபாலிடம் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ளார். டிடிவி தினகரனோடு மூவரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், " நான் அரசுக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறேன். அரசுக்கு எதிராக செயல்படவில்லை. நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர் கூட இல்லை" என கூறியுள்ளார்.

கலைச்செல்வன் அ.ம.மு.கவின் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT