Skip to main content

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்போம்... கலைச்செல்வன், இரத்தினசபாபதி தகவல்

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. முதல் நாளான 28ஆம் தேதி முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. 


  kalaiselvan rathinasabapathy prabhu


இந்தநிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வீர்களா என நாம் கேட்டதற்கு, கூட்டத் தொடரில் கலந்து கொள்வோம். அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வரவில்லை. ஆகையால் அதில் கலந்துகொள்ள இயலாத நிலை உள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் விசயத்தில் அதிமுக கொறடா உத்தரவுபடி செயல்படுவோம் என கலைச்செல்வன், இரத்தின சபாபதி ஆகியோர் தெரிவித்தனர். 
 

டிடிவி தினகரன் - தங்க தமிழ்செல்வன் மோதல் குறித்த கேள்விக்கு, கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்று கலைச்செல்வன் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் பிரிந்த காலத்திலேயே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை வெற்றிக்கரமாக நடத்த வேண்டும் என்று கூறிவருகிறேன் என்றார் இரத்தின சபாபதி. 


 

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடன் புகார் அளித்தார். இந்த இந்த விவகாரம் குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என 3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி,  ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இடைக்கால தடை பிரபுவுக்கும் பொருந்தும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய மற்றொரு மாஜி எம்.எல்.ஏ; 7 இடங்களில் சோதனை

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

Anti-corruption department raids the house of another AIADMK former MLA

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

''எடப்பாடி போல நாங்க இல்ல... பாஜகவுடன் உண்மையான கூட்டணி...'' -அறந்தாங்கி ரத்தினசபாபதி பேட்டி!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

admk

 

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் தலைமை நாங்கள் தான் என்று சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியும் ஒபிஎஸ்ஸும் ஒருவரையொருவர் நீக்குதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தை தெற்கு வடக்காக பிரித்து தெற்கு மா.செ.வாக வைரமுத்துவும், வடக்கு மா.செ.வாக மாஜி விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவும் உள்ள நிலையில் ஓபிஎஸ் அணியில் புதிய மா.செக்களாக தெற்கு மாஜி அறந்தாங்கி ரத்தினசபாபதி, வடக்கு மா.செ.வாக ராஜசேகரன், கிழக்கு மா.செ.வாக ஞான.கலைச்செல்வன் ஆகியோரை  நியமித்துள்ளனர்.

 

ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட புதிய மா.செக்கள் சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், அறந்தாங்கி உட்பட பல முக்கிய நகரங்களுக்குச் சென்று கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்கள். தொடர்ந்து அறந்தாங்கியில் பேட்டியளித்த ரத்தினசபாபதி, ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நிரந்தர ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்தான் உள்ளார். தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. பிரதமர் மோடி சென்னை வந்தார். நல்ல திட்டத்திற்காக வந்தார். நாங்கள் அவருக்கு உண்மையான தோழமை கட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.

 

திருமணம் செய்து கொள்வது ஒருவர் இன்னொருவருடன் வாழ நினைப்பது என எடப்பாடியார் போல இல்லாமல் பாஜகவுடன் உண்மையான கூட்டணியாக இருக்கிறோம். கூட்டணி விசுவாசம், தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். ஆனால் அவர்கள் (எடப்பாடி) வேறு ஒருவருடன் மறைமுக கூட்டணி வைப்பதற்காக கட்சியை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்'' என்றார்.

 

தொடர்ந்து பேசிய வடக்கு மா.செ ராஜசேகரன், ''தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்க்கு அழைப்பு கொடுத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று கோவை செல்வராஜ் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் கொடுத்துள்ளார். இதை யாராலும் மறைக்க முடியாது'' என்றார்.