ADVERTISEMENT

கரோனா தொற்றால் கணவர் இறந்த சோகம்!- விருதுநகரில் ஆசிரியை தற்கொலை!

11:53 AM Jun 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா, வேறு வழிகளிலும் மனித உயிரகளைப் பறிக்க ஆரம்பித்துவிட்டது. அப்படித்தான், விருதுநகரில் ஆசிரியை ரமாபிரபா உயிர் பறிக்கப்பட்டுள்ளது. வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் கரோனாதான்!

விருதுநகரைச் சேர்ந்த ரயில்வே அலுவலர் பிரபாகரனுக்கு நடந்த பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும், உடல்நலக் குறைவு காரணமாக, மதுரை அரசு மருத்துவமனையில் இறந்துபோனார்.

பிரபாகரனுடைய மனைவி ரமாபிரபா, ஏற்கனவே, விருதுநகரிலுள்ள வீட்டில், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். கணவர் இறந்த தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதும், மனமுடைந்து கதறினார். பிரபாகரன் உடல் தகனம் செய்யப்பட்டதும், தான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டின் அறையிலேயே, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

‘கரோனா தொற்றிவிடுமோ; உயிரைப் பறித்துவிடுமோ?’என்ற பீதியில்தான், உலகம் முழுவதும் உள்ள மக்களும் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT