இரண்டு முறை தோற்றதால் விக்கிரமாதித்த முயற்சியாக தளராமல் தற்போதைய தென்காசி நகராட்சியின் தனது 8- ம் வார்டு பெண்களுக்கானது என ஒதுக்கப்பட்டதால் போட்டியிடும் பொருட்டு பா.ஜ.க. கட்சித் தலைமைக்கு விருப்பமனுக் கொடுத்தவர் நேர்காணலுக்கும் சென்றிருக்கிறார்.
ஆனால் எதிர்பாராத வகையில் கட்சித் தலைமை பொன்னம்மாள் என்பவரிடம் 5 லட்சம் வாங்கிக் கொண்டு அவரை 8- வது வார்டின் வேட்பாளராக அறிவித்ததாக தகவல் செல்விக்குப் போக, அதிர்ச்சியானவர் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ராமராஜை போனில் வறுத்தெடுத்திருக்கிறார்.
இதோடு கட்சிக்கும், எனக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. என் வீட்டுக்காரர் எதுக்கும் வரமாட்டார். நானும் என் வீட்டுக்காரரும், இனிமே எதுக்கும் வரமாட்டோம். கட்சி கெட்டுப் போறதுக்கு இந்த மாதிரி பண்றது தான் என்று செல்வி படபடவென பொறிய மாவட்டத் தலைவரான ராமராஜ் செல்வியைச் சமாதானப்படுத்தியுள்ளார். நான் யார் கிட்டயும் சீட்டுக்குப் பணம் வாங்கல. இறைவன் உங்களுகு்குத் துணை நிற்பான். நீங்க அடுத்த பதவிக்குப் போகலாம். என்று சமாளித்திருக்கிறார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்களில் வைரல்.
இதுகுறித்து நாம் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ராமராஜிடம் கேட்டதற்கு உள்கட்சி விவகாரம் என்று முடித்துக் கொண்டார். செல்வியிடம் கேட்டதில், நடந்தவைகளை மாநிலத் தலைவருக்குத் தெரியப்படுத்திவிட்டேன். பதில் வரல. என்கிறார்.
இவர்களின் குடைச்சல் தாளமாட்டாத செல்வியோ, தற்போது தென்காசி நகரைவிட்டு வேறு ஒரு ஊரிலிருக்கிறாராம்.