இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அதேபோல் விஜய்க்கும் அந்த உரிமை இருக்கிறது” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை, சட்டமன்ற தேர்தலில்தான் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது திமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக திமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. முதல்வரின் நல்லாட்சியினால் மக்கள் மீண்டும் திமுகவைதான் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள் என்று பதிலளித்தார்.
விஜய்யின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, ஒருவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து அரசியலில் வந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.