Skip to main content

கிராமத்தில் கலைஞர் அறிவாலயம் கட்டும் தொண்டர்கள். – அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி.

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள குடிமல்லூர் கிராமம். இந்த ஊராட்சியில் உள்ள திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இணைந்து கலைஞர் அறிவாலயம் என்கிற பெயரில் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்தனர். இதற்காக திமுகவின் மாநில மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழியிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரும் மகிழ்ச்சியோடு நானே வந்து அடிக்கல் நாட்டுகிறேன் என வாக்குறுதி தந்துள்ளார். அதன் அடிப்படையில் வேலூர் கிழக்கு மா.செ காந்தியுடன் அந்த கிராமத்துக்கு செப்டம்பர் 16ந்தேதி சென்றார்.

 

vellore dmk office

 

 

அந்த ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன், ஊராட்சி செயலாளர் தினகரன் மற்றும் திமுக தொண்டர்கள் ஏற்பாடு செய்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் முதல் செங்கல்லை எடுத்து தந்து தொடங்கிவைத்தார் கனிமொழி எம்.பி.

அங்கு திரண்டுயிருந்த பொதுமக்கள் முன் பேசும்போது, நம் கலச்சாரத்தை, மொழியை அழிக்கும் வேலையை மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம் செய்கிறது, அதற்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் துணைபோகிறது. நாம் நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, மொழியை காக்க திரள வேண்டும், இந்த போராட்டத்தில் திமுக முன்னிலையில் நிற்கும் என்றார்.

அதோடு, கலைஞர் அறிவாலயத்தில் நூலகமும் அமையவுள்ளது எனச்சொல்லியுள்ளார்கள். அந்த நூலகத்துக்கு தேவையான அனைத்து நூல்களும் நான் என் சொந்த செலவில் வாங்கி தருகிறேன் என்றார்.

35 வருடங்களுக்கு முன்பு கட்சிக்கென பேரூராட்சிகளில் இடம் வாங்கி கட்சி அலுவலகம் அமைத்தார்கள். அண்ணாவின் கனவான ஊருக்கு ஓர் கட்சி அலுவலகம் எனும் பல ஆண்டுகளாக நிறைவேறாமலே இருக்கும் நிலையில் குடிமல்லூரில் அலுவலகம் காட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.  

பேரூராட்சிகளில் அலுவலகம் அமைத்த பின் திருச்சியிலும், பின்னர் விழுப்புரத்திலும், கோவையிலும் கலைஞர் அறிவாலயம் கட்டினார்கள் அந்த மாவட்ட நிர்வாகிகள்.

பல மாவட்டங்களில் திமுகவுக்கு என சொந்தமாக கட்சி அலுவலகம் கிடையாது. கட்சியில் செல்வாக்காக உள்ள ஒரு மா.செவாக உள்ள எம்.எல்.ஏவின் இடங்களில் தான் அலுவலகங்கள் அமைந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கலைஞர் அந்த இடங்களை கட்சிக்காக கேட்டபோதும், இன்று வரை அதனை எழுதித்தர யாரும் தயாராகவில்லை. 

அப்படி கட்சிக்காக ஒரு இடத்தை இழக்காத நிர்வாகியை நம்பி திமுக இல்லை. இப்படி சொந்த காசை செலவழித்து கட்சி அலுவலகம் கட்டும் தொண்டர்களை நம்பிதான் கட்சி உள்ளது. இவர்கள் இருக்கும் வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்கிறார் மூத்த திமுக தொண்டர் ஒருவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்