ADVERTISEMENT

வைகோவிற்கு விழா - நாஞ்சில் சம்பத் வேண்டுகோள்

03:14 PM Feb 19, 2019 | rajavel

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத், ''நாசகார ஸ்டெர்லைட் நச்ச்சாலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நியாய தீர்ப்பிற்கு பின்னால் வைகோவின் விஸ்வரூபம் தெரிகிறது. உலக அரங்கிலும், மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் 22 ஆண்டுகாலம் போராடி சூழலியலை காத்த முதல் தலைவன் வைகோ.



தமிழர்களுக்கு மட்டுமல்ல சூழலியலை பற்றி கவலைப்படுகிறவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களும் கொண்டாடுகின்ற தலைவர் வைகோ. பணம் பாதாளம் வரை பாயாது என்பதை சரித்திரத்தின் பக்கத்தில் தன்னுடைய சாதுரியத்தால் சாணக்யத்தால் நிரூபித்த தலைவன் வைகோவிற்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT