ADVERTISEMENT

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை! 

02:35 PM Jan 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர், “இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிருப்தியை தருகிறது. இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மனிதநேய அடிப்படையில் முன்கூட்டியே மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT