ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்தார். அப்போது, இலங்கை - தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும், இலங்கை கடற்படை 4 தமிழக மீனவர்களைக் கொன்றதாக எழுந்துள்ள புகார் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சென்னையில் உள்ள மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments