ADVERTISEMENT

சென்னையிலுள்ள 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்-அமைச்சர் செந்தில் பாலாஜி!

09:00 PM Jun 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 7 மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மின் சுற்று கருவி எண்ணிக்கையை அதிகப்படுத்தியதோடு, கூடுதலாக 2 மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு இந்த மருத்துவமனைகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும், ஒரு வழித்தடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அடுத்த 3 நிமிடங்களுக்குள் மின் இணைப்பு தானாகவே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கரோனா தடுப்பூசி மையம், குழந்தைகள் நல மருத்துவமனை- எழும்பூர், அரசு மருத்துவமனை பெரியார் நகர் -கொளத்தூர், கஸ்தூரிபாய் காந்தி அரசாங்க மருத்துவமனை-சேப்பாக்கம், கிங்ஸ் இன்ஸ்டியூட்-கிண்டி, சானிடோரியம் டி.பி மருத்துவமனை-தாம்பரம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை- கே.கே.நகர் என இந்த வசதியானது இந்த 7 மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT