இதற்கிடையில் ரஜினியின் இந்த கருத்திற்கு ட்விட்டரில் பதில் அளித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, "முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா என கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்" என்று தெரிவித்திருந்தார். ரஜினியை உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக உரசி பார்க்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். மேலும் இப்படி விமர்சிப்பது உதயநிதிக்கு அரசியல் வளர்ச்சியை தரும் என்று திமுக நம்புவதாகவும் கூறியினர்.
இந்நிலையில், வடலூரில் ஒரு விழாவில் கலந்த கொண்ட உதயநிதி ஸ்டாலின், விழா முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேதினார். அப்போது, அரசியலுக்கு வருவதாக எனது பள்ளிக்காலத்தில் இருந்தே நடிகர் ஒருவர் கூறி வருகிறார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். பின்னர் தி.மு.க. வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் பாரதிய ஜனதா துணையுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிட தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.