ADVERTISEMENT

கோவில் திருவிழாவில் தகராறு; இரண்டு பேருக்கு கத்திகுத்து - ஒருவர் பலி

04:00 PM Aug 28, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்னஊணை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றுள்ளது‌. அப்போது அதேபகுதியைச் சேர்ந்த 23 வயதான புருஷோத்தமன் ஊர்வலத்தில் நண்பர்களோடு வந்துகொண்டு இருந்தார். இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வருகிறார். புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் 28 வயதான நண்பர் தீபன் இருவரும் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கரகத்தின் முன்பாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

இதில் அதே ஊர் புருசோத்தமனின் எதிர் வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன்கள் பாலகணேசன், பாபு(எ) யோகானந்தன் ஆகியோர் தங்களது நண்பர்கள் ஸ்ரீநாத், முனுசாமி, சுமன் ஆகியோர்களோடு ஊர்வலம் வந்தனர். இந்த இரு குழுக்களும் நடனம் ஆடும் போது கால் மிதித்ததில் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் அருகே இருந்த வீட்டிற்கு சென்று கத்தி எடுத்து வந்து புருஷோத்தமன் மற்றும் தீபன் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் புருஷோத்தமன் என்பவரின் நெஞ்சுப் பகுதியில் ஆழமாக குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்துள்ளார். இந்நிலையை இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதித்து புருஷோத்தமன் வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தீபன் என்பவருக்கு இடது பக்க முதுகில் கத்தி குத்தியதால் படுகாயம் ஏற்பட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கத்தி குத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் இரவு முழுவது தீவிரமாக தேடி பாலகணேசன், பாபு, ஸ்ரீநாத், முனிசாமி ஆகிய 4 பேரை அணைக்கட்டு போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். மீதமுள்ள ஒருவரை வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சாதாரண வாய் தகராறால் கத்திக்குத்து நடந்து ஒருவர் பலியாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT