ADVERTISEMENT

கொடைக்கானல் சென்று விட்டுத் திரும்பும்போது விபத்து இருவர் பலி! 

12:10 PM May 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (34). இவர், தனது நண்பர்களான ஏழுமலை (29), கவியரசு( 3), சுரேஷ் (40), காமராஜ் ( 39), கார்த்தி (29), மற்றும் செல்வகுமார் ( 32) உள்ளிட்டோருடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் 7 பேரும் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்று விட்டு, சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த கார் நேற்று நள்ளிரவில் மணப்பாறை அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே படுகாயம் அடைந்த ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த நிலையில் காயமடைந்த 5 பேரும் தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT