ADVERTISEMENT

தனியாக குளிக்கச் சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி... சோகத்தில் கிராமம்...

04:15 PM Jul 13, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது கொடுங்கால் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் 12 வயது தினேஷ்குமார், பத்து வயது அஸ்வின்குமார். இவர்கள் முறையே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள குளத்தில் குளிப்பதற்காகத் தனியே சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

அப்படிச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர்கள் பல்வேறு இடங்களில் இரு பிள்ளைகளையும் தேடியுள்ளனர். இந்த நிலையில் தினேஷ்குமார், அஷ்வின் குமார் இருவரும் ஊர்குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்துள்ளனர். இதைப் பார்த்த ஊர்மக்கள் திரண்டு சென்று இரு சிறுவர்களின் உடல்களையும் குளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கொடுங்கால் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT