Skip to main content

இளம்பெண் திடீர் தற்கொலை! - உறவினர்கள் சாலை மறியல்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

The girl who passes away due to dowry torture ... Relatives involved in the riot

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது நல்லாபாளையம். இப்பகுதியில் வசிப்பவர் ஜெயபால் மகன் அருள் (27). இவருக்கும் அனுமந்தபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அல்லி (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அல்லியின் மாமனார், மாமியார் அவரது கணவர் அருள் ஆகியோர் நகை, பணம் என வரதட்சணை கேட்டு அல்லியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இது சம்பந்தமாக உறவினர்கள் தலையிட்டு அவ்வப்போது அல்லியின் குடும்பத்தினரிடம் சமாதானம் பேசி அல்லியை கணவர் வீட்டில் வாழ வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை கணவர் வீட்டில் அல்லி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அல்லியின் தந்தை சண்முகத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அருள் குடும்பத்தினர் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளனர். அவரது புகாரின்பேரில் போலீசார் நல்லாபாளையம் சென்று இறந்துபோன அல்லியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லிக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் அவரது இறப்பு குறித்து மேல் விசாரணைக்காக விழுப்புரம் கோட்ட ஆட்சியருக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அல்லியின் உறவினர்கள் பிரேதப் பரிசோதனை செய்த அல்லி உடலை வாங்க மறுத்துனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்த விழுப்புரம் துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன், உதவி ஆய்வாளர்கள் பரணிதரன், கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் பேரில், அல்லியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அல்லி உடலை பெற்றுச் சென்றனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.