ADVERTISEMENT
ADVERTISEMENT
வாகனத் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் அருகே உள்ள குன்னியூர், மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைக் குறிவைத்து திருடிச் சென்ற புலிவலம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (21), முட்டாஸ் (எ) சக்திவேல் (22) ஆகிய இரு இளைஞர்களையும் அப்பகுதி பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவாரூர் தாலுக்கா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் திருடிய மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments