Skip to main content

“இது வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாக இருக்கிறது” - விவசாயிகள் மகிழ்ச்சி!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

"This is a historic decision" - Farmers happy

 

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்திலிருந்து அதிமுக கட்சியினர் வெளியேறிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகளும் பொதுமக்களும். இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு விரோதமான  மூன்று சட்டங்களைக் கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் கருத்து அறியாமல் கொண்டு வந்தனர்.

 

மேலும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாக விவசாயிகளுக்கு எதிராக, முதலாளித்துவ பெரும் நிறுவனங்களுக்காக சட்டத்தை வேளாண் சட்டம் என்கிற பெயரில் பாராளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றினர். இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய விவசாயிகள் தொடர்ந்து 11 மாத காலமாக வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை டெல்லியில் இன்றுவரை நடத்திவருகிறார்கள். இதுநாள்வரையிலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைத் திரும்பப்பெற மறுத்துவருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தானே முன்மொழிந்து வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாக இருக்கிறது. விவசாயிகள் சார்பில் முழுமனதோடு பாராட்டுகிறோம்.

 

"This is a historic decision" - Farmers happy

 

இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு விடியல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதே நேரம் இந்தச் சட்டம் கொண்டுவருவதற்கு அடிப்படையாக துணைநின்று, அங்கு வாக்களித்து கொண்டுவர உதவி புரிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியும், அவர்களது கட்சியும் இவர்களின் செயல்பாட்டால் தமிழ்நாடு விவசாயிகள் உலக அரங்கில் தலைகுனியும் நிலையை ஏற்படுத்தியது. இப்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றுகிற தீர்மானத்தை ஆதரித்திருந்தால் அதிமுக செய்த தவறை சரி செய்துகொண்டது என விவசாயிகள் அதிமுகவை மன்னித்துவிடுவார்கள். மீண்டும், மீண்டும் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்திலிருந்து அதிமுக கட்சியினர் வெளியேறி இருப்பது வேதனை அளிக்கிறது, இது வன்மையாக கண்டிக்கதக்கது. இது மன்னிக்க முடியாத குற்றம். அதிமுக தொடர்ந்து தமிழக விவசாயிகள் மத்தியில் அன்னியப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது” என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.