ADVERTISEMENT

நகைக்கடை உரிமையாளர் தற்கொலை; காவல் ஆணையர் அதிரடி

11:30 PM Jun 27, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை திருட்டு நகை வாங்கியதாகக் கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் இரவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமாசங்கரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT