ADVERTISEMENT

மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் பெண்கள்!

09:32 PM Jul 01, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தி.மு.க. தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

ADVERTISEMENT

அவருடைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சரத்தின் படி பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண திட்டத்தை முதலமைச்சர் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பெண்கள் மாநகரப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, திருச்சி மண்டலத்தில் அரசு பஸ்களில் மூன்று நாளில் மட்டும் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

திருச்சி மண்டலத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 335 அரசு மாநகரப் பேருந்துகளில் 5.64 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT