ADVERTISEMENT

மறைந்த சரவணபவன் ராஜகோபாலுக்கு நக்கீரன் ஆசிரியர், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் அஞ்சலி!

04:01 PM Jul 19, 2019 | kalaimohan

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார். நேற்று மாலை அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.

இன்று சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து தற்போது அவரது உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் சொந்தஊரான திருச்செந்தூர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை அங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது உடலுக்கு பொதுமக்கள், சரவணபவன் ஊழியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நக்கீரன் ஆசியர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT