Skip to main content

நான் கடத்தப்பட வில்லை... புகாரும் அளிக்க வில்லை என்று பல்டியடித்த ஜீவஜோதி!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

ஒருநாள்கூட சிறைக்குச் செல்லாமல் அண்ணாச்சி இறந்து போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் கணவரின் (பிரின்ஸ் சாந்தகுமார்) ஆத்மா சாந்தி அடையாது. எனக்கும் இந்த மரணம் ஆறாத வடுவாகிவிட்டது''’என்று இந்த நிலையிலும் சொல்கிறார் ஜீவஜோதி. அவர் சொல்லாமல் விட்டவை ஏராளம் என்கின்றனர் முழு விவகாரத்தை அறிந்தவர்கள். சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "சந்தர்ப்ப சாட்சியங்களைப் பார்க்கும்போது, ஜீவஜோதியை அடைவதற்கு ராஜ கோபாலுக்குத் தூண்டுதலாக இருந்ததே ஜீவஜோதியின் தாயார் தவமணிதான் என்பது தெரிய வருகிறது. ஜீவஜோதியைத் திருமணம் செய்து வைப்பதாக ராஜகோபாலுக்கு ஆசையை ஊட்டியதே ஜீவஜோதியின் தாயார் தவமணிதான் என்று தெரிய வருவதால் அவரும் குற்றவாளிதான்'’என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

jeevajothi



1994-ல் பிழைப்பு தேடி தங்கள் குடும்பம் சென்னை வந்ததாகவும், சொத்தை விற்று கையில் இருந்த பணத்தை ராஜகோபாலிடம் கொடுத்து மாதம் ரூ.7000 வட்டி வாங்கி வந்ததாகவும், பிறகு, தந்தை ராமசாமிக்கு சரவணபவனில் வேலை கொடுத்து, கே.கே. நகரிலுள்ள சரவணபவன் ஊழியர் குடியிருப்பில் தாங்கள் வசிப் பதற்கு ராஜகோபால் முன் னின்று ஏற்பாடு செய்ததாகவும் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஜீவஜோதி. ஆக, 13 வயதிலிருந்தே ஜீவ ஜோதிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ராஜகோபால் ஆதரவளித்து வந்திருக்கிறார்.

 

jeevajothi



அண்ணாச்சி ராஜகோபால் வந்துபோன அந்த வீட்டில் தான், இன்னொருபுறம் டியூசன் ஆசிரியர் பிரின்ஸ் சாந்தகுமாருடனான காதலை வளர்த்திருக்கிறார் ஜீவஜோதி. அவர்களின் காதலைக் கடுமையாக எதிர்த்தார் தவமணி. ராஜகோபாலும், சாந்தகுமார் வருவதை நிறுத்தாவிட்டால், சரவணபவன் ஊழியர் குடியிருப்பிலிருந்து ஜீவஜோதி குடும்பம் காலிபண்ண வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும், ஜீவஜோதியும் சாந்த குமாரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். அண்ணாச்சியும் தன் அம்மாவும் விரும்பாத திருமணத்தை செய்து கொண்ட பிறகும், அண்ணாச்சியை தேடி வந்து, டிராவல்ஸ் பிசினஸ் தொடங்குவதற்காக பணம் கேட்டார் ஜீவஜோதி. ராஜகோபாலும் பழைய பாசத்தை விட்டுவிட மனமில்லாமல் உதவி செய்து, டிராவல்ஸ் அலுவலகத்தையும் அவரே திறந்து வைத்தார்.

  saravanabhavan



அந்த நேரத்தில், சாந்தகுமார் அளித்த ஊக்கத்தில் சினிமாவில் நடிப்பதற்கு ஜீவஜோதி தயாரான போது, ராஜகோபால் தனக்கு அது பிடிக்கவில்லை என எதிர்ப்புக் காட்டியுள்ளார். ஜீவஜோதி அதை ஏற்கவில்லை. இந்த நிலையில்தான், அண்ணாச்சி ராஜகோபாலை சுற்றி இருந்தவர்கள், உங்களைப் பணம் காய்ச்சி மரமாக அந்த பொண்ணு நினைக்குது'’என உசுப்பேற்ற, அவர்களின் தூண்டுதலிலேயே சாந்தகுமார் கடத்தலும் கொலையும் நடந்து, அண்ணாச்சியை சரிவில் தள்ளியது.

 

jeevajothi



பின்னர், தண்டபாணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஜீவஜோதி. அப்போது தான் ஜீவஜோதியைக் கடத்த முற்பட்ட சம்பவம் நடந்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாரானது. அந்த வழக்கில் ‘ஜீவஜோதி பிறழ் சாட்சிய மளித்ததால் "ராஜகோபால் உள்ளிட்ட ஆறு பேரையும் விடுவிக்கிறேன்'’என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சேது மாதவன். ஏன் பிறழ் சாட்சியானார் ஜீவஜோதி? ராஜ கோபால் தரப்பிடமிருந்து தண்டபாணி சில லட்சங்கள் பெற்றுக்கொண்டு சமரசம் ஆகிவிட்டார் எனத் தகவல் வெளியானது. அதனால் தான், கோர்ட்டில் ஜீவ ஜோதி சாட்சியமளித்த போது "நான் கடத்தப்பட வில்லை... புகாரும் அளிக்க வில்லை'’என்று பல்டியடித்தார் என்று விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஜீவஜோதி, "எல்லாம் என் தலைவிதி...' என்று மட்டுமே பத்திரிகை யாளர்களிடம் சொன்னார்.


"சட்டம் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கினாலும், இந்த வயதில் சிறையில் அவர் ஒரு சிரமமும் படக்கூடாது என்று மரண தண்டனை வழங்கி விட்டான், அவர் கும்பிட்ட முருகன். கடைசி காலத்தில், அண்ணாச்சிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லையே? இதுவா நீதி?''’என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார், அண்ணாச்சி ராஜ கோபாலின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அந்த விசுவாசி. 

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.