ADVERTISEMENT

ஈரோட்டில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

06:23 PM Jan 03, 2024 | ArunPrakash

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேர்தல் நடத்தை விதிமுறையின் படி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் பவானி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி - கோவை மாவட்டம் மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கும், அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வைரம்-ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், கோவை பி.என்.பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தாமோதரன், ஈரோடு மாவட்டம் பவானி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கோவை கருமத்தம்பட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அன்னம் - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இன்ஸ்பெக்டராகவும், கோவை மேட்டுப்பாளையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் - ஈரோடு தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகவேலு - கோவை கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வடிவேல்குமார் - கோவை தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு டவுன் கிரைம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகன் - கோவை பேரூர் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயசுதா- வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT