ADVERTISEMENT

"காவேரி தாயே... காவேரி தாயே..." - பாட்டு பாடி வேண்டிய டி.ஆர்!

02:11 PM Apr 10, 2018 | kalaimohan

இலட்சிய திமுக சார்பாக தஞ்சை திருவையாறில் லட்சிய திமுக கட்சியின் தலைவர் மற்றும் திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் காவிரி நீர் விரைவில் தமிழகம் வரவேண்டி காவிரி ஆற்றில் மண்டியிட்டு ''காவிரி தாயே தாயே'' என பாட்டுப்பாடி வழிபாடு நடத்தினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவர் பாடிய பாடல்...

"தாயே தாயே காவேரி தாயே தாயே

தாயேன் தாயே... காவேரி தாயேன் தாயே...

தமிழ்நாட்டுக்கு தாயேன் தாயே

பக்கத்திலிருக்கும் மாநிலம் தான் கர்நாடகம்

சில கட்சி இங்க நடத்துதுங்க கபட நாடகம்

எந்த பாவி செஞ்சான் பாதகம்"


அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் காவிரி பிரச்சனையில் பச்சை துரோகம் செய்தவர்களெல்லாம் இப்பொது பச்சை துண்டுடன் போராடுவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை மக்கள் போட்ட ஓட்டுதான் ஆட்சிபுரிகிறது எனக்கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT