ADVERTISEMENT

சென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 !

11:41 AM Mar 23, 2019 | Anonymous (not verified)

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் -12 முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங் அணியும் பெங்களூர் ராயல் சேலஜ்சர்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த போட்டிகள் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகின்றனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற சென்னை சூப்பர் கிங் அணியின் பயிற்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT



இதில் சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது ரசிகர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. இன்று நடைப்பெறும் போட்டியில் வசூலாகும் பணம் முழுவதும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவிகள் அளிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங் அணியின் தலைவரும் , இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவருமான சீனிவாசன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பி . சந்தோஷ் , சேலம் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT