ADVERTISEMENT

கோவை, சேலத்தில் அதிக கரோனா தொற்று!! தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!!

07:03 PM Oct 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 5,243 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 44,150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,272 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 17-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,80,751 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று மேலும் 5,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,97,033 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 67 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,187 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 3,396 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே கோவை மற்றும் சேலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது இன்று ஒரே நாளில் கோவையில் 392 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT