ADVERTISEMENT

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - டி.என்.பி.எஸ்.சி பதில்

03:42 PM Mar 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. ஆனால், இந்த தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இது பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT