இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருவள்ளுர் மாவட்ட நீதிபதியை நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்திரவிட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 2ஆம் தேதி இன்று வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில் நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ணராமமூர்த்தி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புகார் மனுவில் மனுதாரர் அதிகைமுத்தரசி குறிப்பிட்டிருந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்திருந்ததை சீர்படுத்த வேண்டும் மற்றும் பள்ளி வளாகத்தின் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும். இதை ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்திரவிட்டனர். மேலும் இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் மனுதாரர் இதே மனுவில் வழக்கை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.