ADVERTISEMENT

மூன்று வயது பிஞ்சுக்கு பாலியல் வன்கொடுமை; பெயரைக் கேட்டதும் அதிர்ந்த போலீசார்

06:55 PM Feb 06, 2024 | kalaimohan

ராமநாதபுரத்தில் மூன்று வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் மேலகடலாடி பகுதியைச் சேர்ந்த நபர், அவருடைய நண்பரின் குழந்தையைப் பால்வாடியில் விடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். நண்பன் என நம்பி குழந்தையை அவருடன் அனுப்பிய நிலையில், தனியாக அழைத்துச் சென்று அந்த மூன்று வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.

ADVERTISEMENT

மயங்கிய நிலையில் கிடந்த குழந்தை உடனடியாக அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில், அவரது பெயர் உத்தமநாதன் என்பது தெரியவந்தது. கொடூரன் உத்தமநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT