Skip to main content

குழந்தை விற்பனை இப்படித்தான் நடக்கிறதா?-அதிர்ச்சியை ஏற்படுத்தும் குழந்தை விற்பனை!! 

Published on 09/02/2020 | Edited on 10/02/2020

நாம் உண்ணும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுபாட்டினால் குழந்தை குழந்தையின்மை என்கிற பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளை விலைகொடுத்து விற்பனை செய்யும் ப்ரோக்கர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது .

இதனால் தமிழக அரசு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒரு தனி அமைப்பை மாவட்டம் தோறும் ஏற்படுத்தி குழந்தைக் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் குழந்தை விற்பனையில் லட்சக்கணக்கில் பணம் கிடைப்பதால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

 Is baby sales going like this?

 

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் காமராஜர் தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி அஸ்வினி திருட்டு குழந்தையை வாங்கி வளர்ப்பதாக மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரின்  அடிப்படையில் பிறந்த விசாரணையில் பிறந்த 3 மாதத்திற்கு முன்பு திருவள்ளூர் பகுதியில் உள்ள புரோக்கர் ஒருவர் மூலம் ஒரு லட்சம் கொடுக்கும் ஆண் குழந்தையை விலைக்கு வாங்கியதாக இதனுடைய உண்மையான பெற்றோர் புவனேஸ்வரி கிருஷ்ணர் என்றும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்து குழந்தையின் பிறப்பை கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.


முறையற்ற முறையில் திருட்டுத்தனமாக குழந்தையை விற்ற அந்த புரோக்கர் தற்போது தலைமறைவாகி விட்டதால் குழந்தை எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதேபோன்று உப்பிலியாபுரம் பகுதியை சார்ந்த திருமணத் தம்பதிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று விற்பனை செய்திருப்பதாக தகவல் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஒரு இதுகுறித்த விசாரணையில் ....

தர்மராஜ் ராணி தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவுசெய்து அதை தன் உறவினர்கள் யாரிடமும் சொல்லாமல் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அரசங்குடி சித்தாள் வேலைக்கு வந்தார்.

இங்கு வேலை செய்த போது ஷீலா என்பவருடன் பழக்கமாகி அவருடன் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ராணி பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பிறந்த நான்காவது நாளில் துறை சார்ந்த தம்பதிகளுக்கு ராணியின் தாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டார்.

அதேநேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர் ராணி தர்மராஜ் என்பதற்கு பதிலாக சிவகாமி பாலசுப்ரமணியன் என்று பதிவு செய்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் இதை வைத்து  விசாரணையில் இறங்கினர் ஷீலா என்பவர் ராணிக்கு பிறந்த குழந்தையை தனது உறவினர் சிவகாமி பாலசுப்பிரமணியன் தம்பதிக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ராணியின் தாயார் வேறு ஒருவருக்கு குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு பேரம் பேசியதால் கடுப்பான ஷீலா காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் இந்த குழந்தை விற்பனை விவகாரம் வெளியே வந்தது. இந்த இரு சம்பவங்களும் திருச்சியிலிருந்து இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.