தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை நிரந்தமாக மூடக்கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டபோராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டனர். அப்போது மத்திய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பின்னர் போராட்டக்காரர்கள் ஆலையின் முன்பகுதி தடுப்புகளை தாண்டி ஆலையை முற்றுகையிட முற்பட்டதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் ஸ்டெர்லைட் ஆலையின் முன் குவிக்கப்பட்டனர்.
Show comments