ADVERTISEMENT

விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு!

04:00 PM Jul 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூபாய் 10 லட்சம் தர தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் 02/07/2020 அன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்றபோது, திருநெல்வேலி மாவட்டம், வீரநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT