Skip to main content

கரோனா பாதித்த கடலாடி லாரி டிரைவர் தூத்துக்குடியில் உயிரிழப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

THOOTHUKUDI DISTRICT DRIVER CORONAVIRUS HOSPITAL


கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து கடலாடியைச் சேர்ந்த லாரி டிரைவர் இன்று (15/05/2020) அதிகாலையில் மூச்சுத்தினறல் காரணமாக உயிரிழந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.


கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி உயிர்ப்பலி வாங்கி வரும் சூழலில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649 எனவும், தமிழ்நாட்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 எனக் கூறும் புள்ளி விபரம் தமிழகத்தில் இன்று மட்டும், இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக 3 இருக்கலாம் என்றும் கூறுகின்றது. இவ்வேளையில், இன்று (15/05/2020) அதிகாலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் மூச்சுத்திணறலில் இறந்துள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இம்மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் இறந்திருக்க இறப்பின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (15/05/2020) அதிகாலை கரோனா வைரஸால் இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவரென்றும், ஊரடங்கின் போது சென்னையிலிருந்து ஊர் திரும்பிய நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்க தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், பலனளிக்காததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐ.எம்.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தான், சென்னையிலிருந்து திரும்பிய தகவலை மருத்துவர்களிடம் கூற கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் மூச்சுத்தினறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 எனவும், அதில் இருவர் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

இந்த 38 பேரில் 26 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.