ADVERTISEMENT

சென்னையில் கடத்தப்பட்ட இளம்பெண் புதுவையில் மீட்பு; அதிமுக நிர்வாகி கைது

04:03 PM Mar 24, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 28). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன் திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக மாணவரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் இளம்பெண் ஒருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோகுலகிருஷ்ணனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.

இதனால் கோபமுற்ற கோகுலகிருஷ்ணன் தனது நண்பர்கள் 4 பேர் உதவியுடன் இளம் பெண்ணை திருமணம் செய்யும் நோக்கில் கடந்த 21 ஆம் தேதி காலை வீட்டில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட இளம்பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வந்தனர். கோகுலகிருஷ்ணன், கடத்தப்பட்ட இளம்பெண் ஆகிய இருவரும் புதுச்சேரியில் உள்ள கோட்டைகுப்பம் என்ற பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி விரைந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டதுடன் கோகுல கிருஷ்ணனையும் கைது செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT