இந்தாண்டு டிசம்பர் 11ந்தேதி மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட செய்தி தொலைக்காட்சிகள் பல நேரலை செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. இதில் சில தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை.
ஆளும் கட்சி சார்பில் நடத்தப்படும் ஜெ தொலைக்காட்சி கோயிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதை நேரலை (Live) செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல் தீபம் ஏற்றுவதை மலைமேலிருந்து நேரலை செய்யவும் தந்துள்ளனர் அதிகாரிகள். கோயிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதை நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வரும், அதே நேரத்தில் 2666 அடி உயரமுள்ள மலையில் உச்சியில் இருந்து நேரலை செய்வதற்கு தரையில் இருந்து மலை உச்சிக்கு கேபிள் போட்டு வருகின்றனர் ஜெ தொலைக்காட்சி குழுவினர்.
ஜெ தொலைக்காட்சிக்கு நேரலை செய்வதற்கான வசதி அவ்வளவாக கிடையாது. இதற்காக மற்றொரு பிரபல சேனலின் உதவியுடன் இந்த பணிகளை செய்து வருவதாக சேனல் வட்டாரங்கள் கூறுகின்றன.